வளைகுடா நாடுகள் முழுவதும் நியாயமற்ற தாக்குதல்கள்: கத்தார் பிரதமர் கடும் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உணவு, குடிநீர் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் "பொறுப்பற்றவை" என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி எச்சரித்துள்ளார்.
நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோருடன் (Jonas Gahr Store) தொலைபேசி வாயிலாக உரையாடியபோது திங்கள்கிழமை மதியம் அவர் இந்த தற்காலிக கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
வளைகுடா நாடுகள் முழுவதும் தாக்குதல்
குறிப்பாக, பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் கத்தார் மீது ஈரான் மேற்கொண்டு வரும் "நியாயமற்ற ஆக்கிரமிப்புகளை" நிறுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எரிசக்தி மற்றும் குடிநீர் நிலையங்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் முழுவதும் இதேபோன்ற தாக்குதல்களை நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தாக்குதல்
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை குவைத்தின் இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் (Water Desalination Plants) மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்புகள் போர்க்களமாக மாற்றப்படுவது ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று கத்தார் கவலை தெரிவித்துள்ளது.