யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
யாழ். நீர்வேலி பகுதியில் பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுதேர்தல் முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பாக குறித்த பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட சிலர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர், தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒரு பெண்ணும், 2 ஆண்களும் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி முச்சக்கரவண்டி ஒன்றில் வருகைதந்த அடையாளம் தெரியாத சிலரே தாக்குதலை மேற்கொண்டதாக மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri