தேர்தலுக்குப்பின் காத்திருக்கும் அதிரடி கைதுகள்: எச்சரிக்கும் அநுர தரப்பு
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி தேர்தலுக்காக இடம்பெற்ற பிரசார மேடைகளில் தேசிய மக்கள் சக்தியானது படுகொலைகள், நீதி விவகாரங்கள், அரச ஊழல் தொடர்பிலான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தியிருந்தது.
தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் அவ்வாறான தவறுகளுக்கு நீதி நிலைநாட்டப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மேடைகள் எங்கும் உறுதிமொழிகள் எதிரொலித்தன.
அந்த வகையில், தற்போது ஆட்சிபீடத்தை அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் கைப்பற்றியுள்ள நிலையில், மேடைகளில் முன்வைத்த உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்வதாக எதிர்க்கட்சி தரப்புக்களால் குற்றம் சுமத்தப்படுகின்றன.
இந்த குற்றச்சாட்டுக்கள் சமூகத்தின் மத்தியிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், இலங்கை அரசியலில் எதிர்கால திட்டமிடல்களை அநுர அரசாங்கம் எவ்வாறு மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பான சில விளக்கங்களை அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பொது தேர்தல் வேட்பாளர் நாராயணன் பிள்ளை சிவனந்தராஜா வழங்கியுள்ளார்.
தமது அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றி சட்டத்தை ஒரேபாதையில் நகர்த்தும் எனவும், எதிர்பாராத கைதுகளை மேற்கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவனந்தராஜா தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வருகிறது கீழுள்ள காணொளி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri