கடற்படையினர் கடற்தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது: தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் (Video)
கடற்படையினர் கடற்தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியதெனவும், எரிபொருள் பெற்றுக்கொடுக்க அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகள் ஆர்வம் காட்டாமை தொடர்பில் தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம்
அண்மையில், கிளிநொச்சி - நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள், கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத கடற்படையினர், இவ்வாறு அப்பாவி கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றமையானது கண்டனத்துக்குரியதாகும்.
பொருளாதாரம் பாதிப்பு
இன்று நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணை போதுமான அளவு கிடைக்கவில்லை.
சில கடற்தொழிலாளர்கள் தமது தொழிலை சிரமத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடற்படையினர், கடற்தொழிலாளர்களை கண்மூடித்தனமாக தாக்கியமையானது பொருத்தமற்றதென்பதுடன், கண்டனத்துக்குரியதாகும்.
இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தாக்கிய கடற்படையினர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
கடற்தொழிலாளர்கள் மீது தவறுகள் இருப்பின் உரிய விசாரணைகள் மூலம் அது கண்டறியப்பட வேண்டும்.
எமது நாட்டின் பொருளாதாரத்தை விவசாயமும், கடற்தொழிலுமே பெரும்பாலும் தாங்குகின்ற போது விவசாயத்திற்கும், கடற்தொழிலுக்கும் இன்னும் மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
அரசாங்க நடவடிக்கைகள்
இவ்விடயம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சரும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறை செலுத்தவில்லை.
இவ்வாறு நடவடிக்கை எடுக்காத அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகளின் செயற்பாட்டினை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.
விவசாயத்திற்கும், கடற்தொழிலுக்கும் வேண்டிய எரிபொருளை பெற்று கொடுக்க வேண்டும். கடற்தொழிலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளாது இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

மோகன்லால் படத்தை பின்னுக்கு தள்ளி, மலையாளத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லோகா!! மாபெரும் வசூல் சாதனை Cineulagam
