தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல் (Video)
கிளிநொச்சி- வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் என்னும் 3 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தாக்குதலிற்குள்ளான குடும்பஸ்தரின் படகினை, அவரது நண்பர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் கடலிற்கு எடுத்து சென்றுள்ளனர்.
மாலை ஆகியும் கரை திரும்பாத நிலையில் குறித்த நபர் கடற் கரைக்கு சென்று அவதானித்துள்ளார்.
கடற்படை முகாம்
பின்னர் 6 மணியளவில் கரைக்கு திரும்பிய படகு, கடற்படை முகாமிற்கு முன்பாக கரை ஏற்றப்பட்டது.
இந்த நிலயைில், படகினை செலுத்தியவர்கள், கடற்படை முகாமிற்கு பதிவிற்காக சென்றுள்ளனர்.
இதன்போது குடும்பஸ்தரின் படகில் ஏற்றி வந்த மண்ணெண்ணையை பதிவு மேற்கொள்ளும் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த மண்ணெண்ணை கொள்கலனை அகற்றுமாறு அவர்களிடம் கடற்டை அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அவர்களை அதனை அகற்றியுள்ளனர்.
கருத்து முரண்பாடு
இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடற்படை அதிகாரி ஒருவர் அவர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியை சூடுவதற்கு ஏற்ற வகையில் தயார்
செய்ததாகவும், அதனை ஒளிப்பதிவு செய்ய முற்பட்டபோது தொலைபேசியை பறித்து,
பின்னர் தம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தன்னையும், தன்னுடன் நின்றவர்களையும் கடற்படையினர் துரத்தி துரத்தி தாக்கியதாகவும், தாக்குதலின் போது தான் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவத்தின்போது, காயங்களிற்குள்ளான நபர் சுயநினைவிழந்து கிடப்பதை அவதானித்த கிராமத்தவர்கள், அவரை வேரவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், குறித்த நபருக்கு சொந்தமான இரண்டு கையடக்க தொலைபேசிகளும், கடற்படையினரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொதுமகனும், இரண்டு கடற்படை உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் ஏற்புடையதல்ல
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜ், ”தாக்குதல் சம்பவம் ஏற்புடையதல்ல எனவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
