நடுக்கடலில் பயணித்த கப்பல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கட்டார், ராஸ் லஃபான் பகுதிக்கருகில் நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சம்பவம் தொடர்பில் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், குறித்த பகுதியில் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி முனையத்தில், ஈரானின் ஏவுகணைகள் விழுந்ததில் பல வசதிகள் பலத்த சேதமடைந்துள்ளன.
விரும்பத்தகாத நபர்கள் அறிவிப்பு
நான்கு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட நிலையில், ஒன்று இலக்கை எட்டி பெரும் தீயை உண்டாக்கியுள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் அபுதாபியின் ஹப்ஷன் எரிவாயு நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. "இனி கத்தார் மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது" என டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ராஸ் லஃபான் எரிவாயு நிலையத்தில் ஈரான் தாக்குதலால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக கத்தார் அறிவித்த நிலையில், ஈரான் தூதரகத்தின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தூதர்களை கத்தார் விரும்பத்தகாத நபர்களாக (persona non grata) அறிவித்துள்ளது.
எரிபொருள் QR குறியீடு பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! இன்று முதல் வாகன உரிமையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய அம்சம்