சுதந்திரபுரம் சந்தியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்! இருவர் படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்பாக நேற்றிரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதில் வீடு ஒன்றின் சில பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam