சுதந்திரபுரம் சந்தியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்! இருவர் படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்பாக நேற்றிரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதில் வீடு ஒன்றின் சில பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri