சுதந்திரபுரம் சந்தியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்! இருவர் படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்பாக நேற்றிரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதில் வீடு ஒன்றின் சில பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan