வெளிநாடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நடந்த கொடூரம்
ஈரானில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி தொழில்நுட்பவியலாளர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது ஈரானின் Chabahar Konarak விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பராமரிப்பு வேலைகள்
உள்ளூர் தொழில்நுட்பவியலாளரான அபோல்பஸ்ல் அமிரி (Abolfazl Amiri) தனது வழக்கமான பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானத்தின் வலது இறக்கையில் உள்ள இயந்திரத்தை திறந்து சோதனைக்காக இயக்கப்பட்ட போது கவனக்குறைவாக நெருங்கிய அந்த தொழில்நுட்பவியலாளர் அதனுள் காணப்பட்ட இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இயந்திரம் தீ பற்றியெரிந்துள்ள நிலையில் உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர் அந்த தொழில்நுட்பவியலாளரின் உடலை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஈரானிய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
