உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா (Russia) உக்ரைன் மீது முன்னெடுத்த பயங்கர ஏவுகணை தாக்குதலில் தலைநகரில உள்ள குழந்தைகள் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நேற்று(08) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் தலைநகர் கீவ் உட்பட பல பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
38 ஏவுகணைகள்
கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகவும் பயங்கரமான தாக்குதலாக பார்க்கப்படுவதோடு, மொத்தமாக இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், குழந்தைகள் உட்பட 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதலில் பிரசவ மையம், குழந்தை பராமரிப்பு மையங்கள், ஒரு வணிக மையம் மற்றும் வீடுகள் என பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
Imagine Putin deliberately bombing London’s Great Ormond Street Hospital.
— Dr Rachel Clarke (@doctor_oxford) July 8, 2024
Today, in Kyiv, he’s done exactly this. Ohmatdyt is Ukraine’s foremost children’s hospital, caring for children from all across the country.
The attack is despicable.#SlavaUkraini ?? pic.twitter.com/gQ8FDGvKJL
ரஷ்ய பயங்கரவாதிகள் இதற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஏவப்பட்ட 38 ஏவுகணைகளில் 30ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியதாகவும், மீதமுள்ளவை தாக்குதல் இலக்கை அடைந்தாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri