தலை துண்டிக்கப்பட்டு நட்சத்திர கரப்பந்தாட்ட வீராங்கனை படுகொலை!
தலிபான்களால் ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்து அணியின் வீராங்கனையொருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹ்ஜபின் ஹகிமி என்ற வீராங்கனை தலிபான்களால் கொல்லப்பட்டார். அத்துடன், அவரின் குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்பு அணியிலிருந்து இரண்டு வீராங்கனைகளால் மட்டுமே நாட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது என்றும் அவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,