வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் - வெளிவந்துள்ள அறிவிப்பு
அஸ்வெசும நலத்திட்டத்தின் ஒரு பகுதியினருக்கான பணம் இன்று(18.12.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி குறித்த நலத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் முதியோர் உதவித்தொகை கொடுப்பனவே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பு
பயனாளிக் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு ஏற்கனவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் இன்று (18) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan