இராமேஸ்வரத்தில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளத்தில் இருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இருவரும் திசைமாறிப் பயணித்தனர் என்று தெரிவித்தபோதும் தமிழகப் பொலிஸார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பயணித்த படகில் எந்தவொரு மீனோ அல்லது கடற்றொழில் உபகரணங்களோ காணப்படாத நிலையில் இரு காண்களில் 55 லீற்றர் எரிபொருளும் காணப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
