சட்ட விரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது
கிளிநொச்சி(Kilinochchi) சுண்டிக்குளம் - சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று ( 02.05.2024)கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
[1D6UTTO
திடீர் சோதனை
கடற்படை முகாமிற்கு அருகில் நீண்ட நேரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் தரித்து நின்ற படகை சுண்டிக்குளம் கடற்படையினர் திடீர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது படகு அனுமதி பத்திரம் இன்றி கடற்றொழிலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் சுண்டிக்குளம் கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
