மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வர நடவடிக்கை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கை திரும்ப அழைத்து வரவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களை நாளை 23ம் திகதியன்று திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர்கள் நாளை மியன்மாரின் யங்கூனில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச்செல்லப்;பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இதனையடுத்து தற்போதைய சுகாதார நடைமுறைகளின் கீழ் மீனவர்களை தனிமைப்படுத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri