மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வர நடவடிக்கை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கை திரும்ப அழைத்து வரவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களை நாளை 23ம் திகதியன்று திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர்கள் நாளை மியன்மாரின் யங்கூனில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச்செல்லப்;பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இதனையடுத்து தற்போதைய சுகாதார நடைமுறைகளின் கீழ் மீனவர்களை தனிமைப்படுத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
