மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வர நடவடிக்கை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கை திரும்ப அழைத்து வரவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களை நாளை 23ம் திகதியன்று திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர்கள் நாளை மியன்மாரின் யங்கூனில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச்செல்லப்;பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இதனையடுத்து தற்போதைய சுகாதார நடைமுறைகளின் கீழ் மீனவர்களை தனிமைப்படுத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri