பாதாள உலகக்குழுத் தெல் பாலாவின் மகள் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் தெல் பாலா என அழைக்கப்படும் கருப்பையா பாலன் என்ற பாதாள உலகக்குழு தலைவரின் மகள் 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான கருப்பையா நிர்மலா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
சந்தேக நபரின் தந்தையான தெல் பாலா இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்தியாவில் தலைமறைவாக இருந்த அவர்03 வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் மரணமடைந்தார்.
இந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டுள்ள தெல் பாலாவின் மகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
