மாவீரர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு: கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு

Sri Lankan Tamils Tamils Kilinochchi Sri Lanka Final War Northern Province of Sri Lanka
By Erimalai Nov 24, 2023 07:53 PM GMT
Report

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு, அவ்வந்த இடங்களில் நினைவேந்தலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

குறித்த குழுவினர்  வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கனகபுரம் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உப தலைவர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவிக்கையில்,

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தினுடைய மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை 27ம் நபள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்பும் முயற்சி: பொதுமக்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட நிறுவனம் (Photos)

யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்பும் முயற்சி: பொதுமக்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட நிறுவனம் (Photos)

மாவீரர்களின் பெயர் பட்டியல்

கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் போது,மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்குள்ளே மிகுந்த மக்கள் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

சுடர்களை ஏற்றுவதில் மாவீரர் குடும்பங்கள் பங்குகொள்ள முடியாத அளவிற்கு மக்கள் திரழ் அதிகமாக இருந்திருக்கின்றது. அதனை ஒழுங்கு படுத்தும் முகமாக, 2009ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையில் மாவீரர் துயிலுமில்லங்களில் விளக்கேற்ற செய்ய வேண்டும் என்ற எமது பணிக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக இம்முறை துயிலுமில்ல வளாகம் 2007ம் ஆண்டு வரை மாவீரர்களாக இருந்த மாவீரர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டு “அ“ தொடக்கம் “ஈ“ வரையான வலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் நினைவு கற்கள் என்பவற்றினுடைய பெயர் விபரங்கள் குறித்த வலையங்களில் பெயரிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

மாவீரர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு: கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு | Arrangements For Maaveerar Memorial

ஆகவே பெற்றோர்கள், உரித்துடையவர்கள் 2 மணித்தியாளங்களாவது முன்பாக வருகை தந்து தங்களது பிள்ளைகளின் பெயர் எந்த வலையங்களிற்குள் உள்ளடங்கப்பட்டிருக்கின்றதோ, அந்த வலையங்களிற்குள் சென்று சுடரேற்றுவதற்கு தயாராகுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

2007, 2008, 2009ம் ஆண்டு வரையும் மாவீரர்களானவர்களது பெயர் விபரங்கள் இதுவரையும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அத்தைகைய விபரங்கள் தலைமைச் செயலகத்தினால் உத்தியோகபுர்வமாக வெளியிடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவையும் எதிர்வரும் காலங்களில் ஒழுங்குபடுத்தப்படும்.

இந்த வருடம் அப்படியாக மாவீர்ர்களிற்காக “உ”வலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வலையத்தில் பெயர் குறிப்பிடப்படாத மாவீர்ர்களிற்கான சுடர்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதி மற்றும் கொழும்பிலிருந்தும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் (Video)

தமிழர் பகுதி மற்றும் கொழும்பிலிருந்தும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் (Video)

துயிலுமில்லத்திற்கான பேருந்து சேவை

இது தவிர, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்களிற்கு செல்ல முடியாதவர்கள் விளக்கேற்றுவதற்காக “ஊ“ வலையம் ஒழுங்கமைக்கப்பட்டள்ளது.

ஆகவே, இந்த வலையங்களின் அடிப்படையில், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் நேர காலத்தோடு வருகை தந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைப்புக்கு அமைவாக அஞசலி செலுத்த முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மாவீரர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு: கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு | Arrangements For Maaveerar Memorial

மேலும், துயிலுமில்லத்தின் பிரதான வீதியானது 3 மணியுடன் இடை மறிக்கப்பட்டு, மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாற்று வழியை பயன்படுத்த சாரதிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், அதேவேளை, துயிலுமில்ல வளாகத்திற்கு இரு பகுதியிலும் வானகனங்களை தரிப்பிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

மேலு்ம, துயிலுமில்ல வளாகத்தின் புனிதத்துவத்தை பேணும் வகையில் அனைவரும் கலாச்சார உடைகளை அணிந்து அந்த புனிதத்தை பாதுகாக்க ஒத்துழைக்க முன்வர வேண்டும் எனவும், அஞ்சலி செலுத்தப்படும் நேரத்தில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்த்து அஞ்சலிக்கு ஒத்துழைக்கும் வகையில் இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், டிப்புா சந்தியிலிருந்து துயிலுமில்லத்திற்கான குறுந்தூர சேவைகள், தனியார் பேருந்து சேவையினர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அதற்கு அமைவாக குறித்த சேவையினையும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வெளி இடங்களில் இருந்து வருகை தரும் மக்கள் டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் இருந்து குறித்த பேருந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தினை நாடிய பொலிஸார்

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தினை நாடிய பொலிஸார்


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US