வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் பலி
பொலன்நறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கதுருவெல 28 வது மைல் கல்லுக்கு அருகில் இன்று சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலன்நறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்நறுவை ஹதரஹெல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ரத்னகுமார என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர்கள் மினேரியாவில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இவர், சிகிச்சைக்காக பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
மரணம் சம்பந்தமான திடீர் மரண விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனைகள் இன்று பொலன்நறுவை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக விசாரணை நடத்தும் பொலிஸார் கூறியுள்ளார்.