தமிழர் பகுதியில் வைப்படவுள்ள புதிய புத்தர் சிலை- பாதுகாப்பு கோரி கடிதம்
யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு பாதுகாப்பு அனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, எதிர்வரும் 03.01.2026 அன்று இடம்பெறும் என்றும் குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கோரி கடிதம்
மேலும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
எதிர்வரும் 2026 தை மாதம் மூன்றாம் திகதி அன்று காலை 10.00 மணியளவில் கன்யாசந்துவ தும்ரி ஸ்தாச சி தி ராஜ விஹாரையில் இருந்து கொண்டு வரப்பட்டு, புத்தர் சிலை திஸ்ஸ ராஜ விகாரையில் நிறுவப்படும். இதற்காக, பக்தர்கள் மற்றும் ஹிம்வரர்களின் பங்கேற்புடன் ஊர்வலம் நடத்தப்படுவதோடு இது தொடர்பில் தையிட்டி திஸ்ஸ விகாரையின் தலைமை தேரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் பங்கேற்பவர்கள் எந்த பயமோ சந்தேகமோ இல்லாமல் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பொலிஸார் அதை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி போயா தினத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த விகாரை தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதனை அகற்ற வேண்டும் என வலிவடக்கு பிரதேச சபைகள் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் எந்த ஒரு கட்டுமானங்களும் அங்கு இடம் பெறக் கூடாது என சபையால் விகாராதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் புதிய புத்தர் சிலையை வைப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வரும்போது மதநீதியான பிரச்சனையை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியான சந்தேகம் வெளியிடப்படுகிறது
