திடீரென இலங்கையில் குறைக்கப்படும் இராணுவ பலம்!
இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை அடுத்த வருடம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது 200,783 ஆக உள்ள இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும்.
இலங்கையின் இராணுவ பலம்
2030 ஆம் ஆண்டுக்குள் படையினரின் எண்ணிக்கையை 100,000ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இராணுவ பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

அவை ஒன்றாக இருக்கும், ஆனால் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு பரிமாணங்களுக்கு இணையாக வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 2030ஆம் ஆண்டிற்குள் தொழிநுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே மூலோபாய வரைபடத்தின் ஒட்டுமொத்த நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri