கொழும்பு சிஐடிக்கு அருகில் Sniper-உடன் கைதான இராணுவ கொமாண்டோக்கள்! அம்பலமான இரகசியம்
கொழும்பு - 01 இல் அமைந்துள்ள பழைய பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக வைத்து, ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளுடன் நேற்றுமுன்தினம்(13) கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும், இராணுவ அதிகாரிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு அதிகாரிகளும் நேற்று சிவில் உடையில் கறுப்புத் துணியில் மறைத்து ஸ்னைப்பர் துப்பாக்கியை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தவிடயம் தொடர்பில் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதான அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த சதி தொடர்பில் கூறுவதற்கு அரசும் அச்சப்படுகின்றது என்று கூறலாம்.
ஷானி அபேசேகர தொடர்ந்தும் அவரது பொறுப்பில் இருந்தார் என்றால் கைதுகள் தொடரும் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அநுரவின் பதவிக்கு படையினரால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri