மண்டைதீவு உப அலுவலகத்தில் அரச சொத்து முறைகேடு: வேலணை பிரதேச சபை அமர்வில் வாக்குவாதம்
மண்டைதீவு சுற்றுலா தளத்தின் அமைவில் அரச நிதியும் சொத்துக்களும் உயரதிகாரிகள் மூவரால் சூறையாடப்பட்டதாக கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று(21.01.2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மோசடி
இந்த அமர்வில், "எக்கோ டூரிசம்" குறித்து பல்வேறு பிரச்சினைகள் சபையில் பிரஸ்திக்கப்பு விவாதிக்கப்பட்டன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வேலணை பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்பை கருத்தில் கொண்டும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், அந்தத் திட்டத்திற்கான பொறிமுறை முறையாகக் கட்டமைக்கப்படவில்லை. வேலணை பிரதேச செயலகம் தனது திட்ட வரைபாட்டுடன் கொண்டு வந்த குறித்த திட்டத்தை, அன்றைய மாவட்ட அரச அதிபர் எமது பிரதேச சபையிடம் வலியுறுத்தியே கையளித்தார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இருப்பினும், குறித்த திட்டம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் மோசடிகளை எமது சபை கடந்த 2018ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்ததுடன், அவை அன்றைய துறைசார் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அந்த அமைச்சரால் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
எனவே குறித்த விடயம் தொடர்பில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வை எட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வேலணையில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பிரதேசத்தின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் கலந்துகொள்ளமையை கோரிப் பெறவேண்டிய பல விடயங்கள் கைநழுவிப் போய்விட்டதாக உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு தவிசாளர் பதிலளிக்கையில்,
சர்வதேச மைதான அங்குரார்ப்பண நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகள் வேலணையில் நடைபெற்ற போதும் தனக்கு தவிசாளர் என்ற ரீதியில் அழைப்பு விடுக்கப்படாதிருந்தது.
இதன்போது, தனது ஆளுகைக்குள் இருக்கும் இரு வீதிகளுக்கு அண்மையில் அபிவிருத்திக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், தவிசாளருக்கு அல்லாமல் அந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 3 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.
ஆளும் கட்சியின் நேரடி முகவர்களான பிரஜாசக்தி உறுபினர்களைக் கொண்டு அந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியதுடன், இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், பதிலளித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சதீஸ்குமார் கூறுகையில்,
குறித்த வீதி மாவட்ட செயலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாகவும், இதற்கான அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் வீதி அதிகார சபையிடமே கேள்வி எழுப்ப வேண்டும், அதற்காக கட்சியை குற்றம் சாட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri