இளங்குமரன் எம்.பிக்கும் இராமநாதனுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம்..! வெளியான காணொளி
நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையான இராமநாதனுக்கும் இடையே காணி பிரச்சினை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றது.
இதில் இராமநாதன், பிணக்கு தொடர்பில் முரண்பட்ட காணி தன்னுடையது என்று கூறிக் கொள்ளும் நிலையில், அதற்கு பதிலளித்த இளங்குமரன் எம்.பி இவ்வளவு காலமும் அங்கஜனை வைத்துக் கொண்டு மேற்கொண்ட அரசியலை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
மேலும், மக்களது காணிகளை இவ்வாறு சுவீகரித்துச் செல்லும் செயற்பாட்டை இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இளங்குமரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளியான காணொளி வருமாறு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
