கிண்ணியா கடற்கரைப் பூங்காவில் கடலலையில் பாதிப்புக்குள்ளான மற்றுமோர் பகுதி
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கிண்ணியா பூங்காவின் அடுத்த பகுதியையும் கடலலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்தப் பூங்காவில் இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு விழுந்ததனால், பூங்காவின் ஒரு பகுதியை கடல் அலை அடித்துச் சென்றிருந்தது.
பொதுமக்களின் கோரிக்கை
அந்த நேரத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரும், வெளிவவிகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் நேரில் வந்து இந்த பூங்காவை பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது, எதிர்காலத்தில் இந்தப் பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனாலும் அதற்கிடையில், நேற்று (19) இன்னும் ஒரு பெரிய மரமும் வேரோடு விழுந்து, பூங்காவின் அடுத்த பகுதியும் கடலுக்கு இரையாகியுள்ளது.

இந்த நிலையில், பூங்காவின் எஞ்சியுள்ள பகுதி அவசரமாக பாதுகாக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், இன்னும் ஒரு வெள்ளம் ஏற்படுகின்ற போது, பூங்காவை முழுமையாக இழக்க வேண்டி ஏற்படும். எனவே, பூங்காவை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam