தமிழ் தேசிய மக்கள் முன்னணி சீனாவின் முகவர்களா? - கோவிந்தன் கருணாகரம் (Video)

India China Batticaloa Govinthankarunakaram
By Independent Writer Jan 29, 2022 07:30 PM GMT
Report

நாங்கள் இந்தியாவின் முகவர்கள் எனச் சித்தரிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா?

சீனா எதிர்பார்ப்பதைத்தானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 


வடக்கு கிழக்கிலே தற்போது அரசியல் பேசும் பொருளாக 13வது திருத்தச் சட்டமும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் மிகவும் நடைபெற்றிருக்கின்றது.

அந்த வகையில் 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த வேண்டும். அமுல்படுத்திய 13 திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணசபை தேர்தலை விரைவாக வைக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள ஒரு கட்சியைத் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் வேண்டிநிற்கின்றனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இந்த 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில் கூடித் தெரிவித்தன. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29 ம் திகதி கைச்சாத்திடப்பட்டுக் கொண்டுவரப்பட்டது. இது வெறுமனவே தமிழர்கள் மீது உள்ள அக்கறை மூலமாகக் கொண்டுவரப்பட்டது அல்ல.

பல தியாகங்கள், உயிரிழப்பு, பல போராட்டங்கள், பல அழிவுகளின் பின்பு அந்த போராட்ட தியாகத்தின் அடிப்படையில் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இன்று நாங்கள் இருக்கும் நிலையைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாங்கள் அனைவரும் விரும்பியே விரும்பாமலே ஏற்றுக் கொண்டிருந்தோம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வந்த 13வது திருத்தச் சட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு எமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிய எமக்கு ஒரு இறுதி தீர்வாக நாங்கள் எந்த இடத்திலும் எவரிடமும் நாங்கள் கூறவில்லை.

தமிழ் ஈழம் வேண்டும் என போராடியவர்கள் எனவே 13வது திருத்தச் சட்டம் மூலம் வந்த மாகாணசபை முறைமையை நாங்கள் இறுதி தீர்வாக எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆழக்கூடிய சுயநிர்ணயம் கூடிய தாயத்தை நாங்கள் ஆழக்கூடிய ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு தான் எமக்கான அறுதி தீர்வாகும்.

2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்படும் வரை தமிழ் ஈழம் இந்த மலரும், அந்தா மலரும் என்ற ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம்.

அந்த காலகட்டத்தில் இலங்கை இந்த ஒப்பந்தத்தை விட இன்னும் தமிழர்களுக்கு உரிமைகளைக் கொடுக்கக் கூடிய ஒரு சில ஒப்பந்தங்கள் வந்திருந்தும் கூட நாங்கள் தனிநாட்டை எதிர்பார்த்து அவைகளைக் கூட நிராகரித்தோம்.

ஆனால் 2009 மே 18க்கு பின்பு தமிழ் மக்கள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றோம் எனச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தற்போது வடக்கு கிழக்கு நலத் தொடர்பை நிரந்தரமாகப் பிரிக்கப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதுடன் வடக்கு கிழக்கில் எமது குடிப்பரம்பலை குறைப்பதற்காக எல்லைப்புறம் ஊடாக பெரும்பான்மை மக்களைக் குடியேற்றிவருகின்றார்.

13வது திருத்தச் சட்டத்துக்கு ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது, அமுல்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டிருக்கின்றது. புதிய அரசியல் அமைப்பு 3 மாதத்தில் வரவிருக்கின்றது.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்த பின்பு உரையாற்றும் அனைத்தும் இந்த நாடு ஒரு பௌத்த நாடு அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்கின்ற ரீதியில் பேசிவருகின்றார்.

எனவே புதிய அரசியல் அமைப்பில் எங்களுக்கான தீர்வு வரும் என எதிர்பார்க்கவில்லை . தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எங்களை இந்தியாவின் முகவர்கள் எனச் சித்தரிக்கின்றனர். அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா? சீனா எதிர்பார்ப்பதைத்தானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள்.

கோட்டாபயவை எதிர்த்து சஜித் பிரேமதாஸ் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அதற்கு முன்பு மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரி பால சிறிசேன போட்டியிட்டார்.

இந்த ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்குச் செய்த அட்டூழியங்கள் அநியாயங்கள் அழிப்புக்களை எதிர்த்து அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய பரப்பிலே உள்ள அனைத்து கட்சிகளும், அனைத்து மக்களும் வீறு கொண்டு எழுந்தபோது தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு நீங்கள் கூறுகின்றீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் மறைமுகமாக யாருக்கு உதவி செய்ய நினைக்கின்றீர்கள்? இன்று சீனா யாழ்ப்பாண கரையோரத்திலிருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்கும் அளவிற்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் நீங்கள் அதை எதிர்க்கவில்லை.

சீனாவைப் பொறுத்தமட்டில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்குமே மனித உரிமைகள் மீறல்களுக்கும் எதிராகவே குரல்கொடுத்த வரலாறு இல்லை. எனவே நாங்கள் எக்காரணம் கொண்டும் சீனாவை ஆதரிக்க முடியாது.

எமக்கு இருக்கும் அண்டை நாடான இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் மாத்திரம் அல்ல. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகால தொடர்புகள் உண்டு.

தற்போது இலங்கை பொருளாதார ரீதியாக அதலபாதாளத்தில் இருக்கின்ற நிலையில் இந்தியா உதவி செய்துவருகின்றது. 1971 ம் ஆண்டு ஜே வி பி கிளர்ச்சியின் போது இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது.

அதேபோன்று விடுதலைப் போராட்டத்துக்கு எந்தளவு உதவி செய்ததோ அந்தளவுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு 2009 இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்தது. அதற்குப் பின்பு வடக்கு கிழக்கிலே பல அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவி செய்தது. மலையகத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

தற்போது இலங்கை பொருளாதாரத்திலிருந்து மீட்பதற்குப் பல உதவிகளைச் செய்துவருகின்றது. எனவே இந்த நேரத்தில் நாங்கள் இந்தியர் பயன்படுத்த வேண்டும் ஏன் என்றால் அவர்களுக்குக் கடமையுண்டு.

13 திருத்தச் சட்டம் முற்று முழுதாக அமுல்படுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் இருப்பையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

இதைவிடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13 திருத்தச் சட்டம் வேண்டாம் ஆனால் அதற்கு ஊடாக அதிகாரமற்ற மாகாணசபை தேர்தல் வந்தால் கூட போட்டியிடுவோம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கின்றனர்.

எனவே தமிழ் மக்கள் எதற்காக போராடினமே அந்த இலக்கை அடையவில்லை. இருந்தும் சமஷ்டியைப் பெறுவதற்கா நாங்கள் போராடுவோம். அதுவரை எமக்கு எமது இருப்பை காப்பாற்றுவதற்கு முழு அதிகார பரவலுடன் 13வது திருத்தச் சட்டம் வேண்டும்.

எனவே 13 திருத்தச் சட்டம் ஊடக தமிழ் மக்களின் இருப்பை கூட இல்லாமல் செய்ய அதற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாடத்தினை உண்மையான தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ் மக்கள் அதனை எதிர்க்கவேண்டும் அவர்களை விரட்டியடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US