சபாநாயகருக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு! அர்ச்சுனா குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் எட்டு நாட்கள் தனது மைக்ரோஃபோனை அணைத்து, தனது உரையை இடைமறித்தமை தொடர்பில் சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உரை தொடர்பில் ஊடகங்களுக்கு தடை விதித்ததற்காக சபாநாயகருக்கு எதிராக இம்மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் (IPU) முறைப்பாடு அளிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
கடுமையான குற்றம்
அத்தோடு எந்த காரணமும் இல்லாமல் பல நாட்கள் தனது உரையை குறுக்கிட்டது கடுமையான குற்றம் என்றும், இந்த முறையும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு அளிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, 78 நாட்கள் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் சார்பாகப் பேச வாய்ப்பு வழங்கப்படாதது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இழைக்கப்பட்ட கடுமையான அநீதி என்றும், அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam