யாழ்ப்பாணம் என்.பி.பியின் வெற்றிலை பெட்டியல்ல..! சபையில் அர்ச்சுனாவின் நையாண்டி பேச்சு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் போக்குவரத்து மற்றும் துறைமுக விவகாரங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதன்போது இராமநாதன் அர்ச்சுனா, யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
இதனை தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, தான் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என அர்ச்சுனா தெரிவித்தார்.

அத்துடன், "சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியன் தான். யாழ்ப்பாணம் என்பது என்பிபியின் வெற்றிலை பெட்டியில்லை.
நான் கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதில் கூட ஒழுங்காக வரவில்லை. வடக்கு மக்கள் காணிக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை சரி முன்னெடுக்கப்பட்டுள்ளதா என கூறுங்கள் பார்ப்போம்” என கேள்வி எழுப்பினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri