அரகலய போராட்டத்தில் பணம் பெற்றவர்களுக்கு நாமல் விடுக்கும் எச்சரிக்கை
கோட்டாபய அரசாங்கத்தை விரட்டுவதற்கு முன்னெடுப்பட்ட அரகலய போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்த பெறப்பட்ட பணம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று கூறினார்.
பணத்தில் நன்மையடைந்தவர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் அரசாங்கங்களை மாற்ற பணம் எவ்வாறு முதலீடு செய்யப்பட்டது என ஆராய்வதாக அறிவித்திருந்தார்.
மேலும் ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி திட்டம் (United Nations Development Programme) மூலம் பணம் எவ்வாறு இவற்றுக்கு முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைத்தது உண்மையாகும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் வாகனங்கள் மற்றும் வீடுகளை வாங்கினர்.

சிலர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களில் தெரியவந்துள்ளது என்றும் கூறினார். போராட்டத்தின் பின்னர் ஒரு பகுதியினர் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களாகினர்.
சிலர் வாகனங்கள் மற்றும் வீடுகளை பெற்றுக் கொண்டனர்.ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பன்னிரண்டு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.