ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனம்
ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிலையில், நிறுவனத்துக்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய நியமனங்கள்
இதன்படி ஏ.கே.டி.டி.டி.அரந்தரா தலைவராகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக கலாநிதி கே.ஏ.எஸ்.கீரகல, சட்டத்தரணி தினேஸ் விதானபத்திரன, பேராசிரியர் கே.எம்.லியனகே,டி.எம்.ஐ.எஸ்.தசநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திறைசேரி பிரதிநிதியாக சதுர மொஹொட்டிகெதர நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனப்பங்குகளை விற்பனை செய்வதற்காக கோரப்பட்ட கேள்விப்பத்திர விண்ணப்ப அடிப்படையில் இந்திய, சீன தனியார் நிறுவனங்கள் உட்பட்ட மூன்று நிறுவனங்கள் தமது விலைக்கோரல்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri