ஜோன்ஸ்டனின் இடைக்கால தடைக்கோரிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!
நீதிமன்ற நிராகரிப்பு
தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட, இடைக்கால தடை உத்தரவு மனுவை இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மனுதாரரால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில், மனுதாரரை கைது செய்ய நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்ற காரணம் காட்டியே இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
சாத்தியமான குற்றத்தில் தனக்கு எதிராக எந்த சந்தேகமும் இல்லை என்று மனுதாரர் வாதத்தை எழுப்புவது நியாயமானது அல்ல என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
மனுதாரர் தொடர்பில் முடிவெடுக்க நீதிவானே பொருத்தமானவர்
அலரிமாளிகையில் மனுதாரர், ஆற்றிய உரையை ஆராய்ந்து, மனுதாரர் குற்றம் செய்தாரா என்பது குறித்து முடிவெடுக்க, நீதவானே பொருத்தமானவர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கருதுகிறது.
09.06.2022 அன்று, அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் முன்னிலையில் சரணடையுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் பணித்தநிலையில், உத்தரவுக்கு இணங்கி மனுதாரர் சரணடைந்தார்
எவ்வாறாயினும், 09.06.2022 அன்று மனுதாரர் நீதிமன்றத்தில் சரணடைந்ததை தன்னார்வ சரணாகதியாகக் கருத முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எனவே மனுதாரர், கோட்டை நீதிவான் முன் முன்னிலையாகும்போது, நீதிவான் புதிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கருதுகிறது.
திலின கமகேயிடம் சரணடைந்த ஜோன்ஸ்டன்
மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி வழங்கிய உத்தரவின் அடிப்படையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் திலின கமகேவிடம் நீதவான் இல்லத்தில் சரணடைந்தார்.
இதன்போது அவரை, 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொந்த பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.