அநுரவின் கோட்டைக்குள் மகிந்தவின் ஆட்டம்! நிதி அமைச்சின் பகீர் தகவல்!
இணையவழித் திருடர்களால் 2.5. மில்லியன் அமெரிக்க டொலர் களவாடப்பட்டுள்ள சம்பவம் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையிலே, அரசாங்கம் மிகவும் பலவீனமான முறையில் இந்த பணப்பரிமாற்றத்தை இணையவழி ஊடாக செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்ப ரீதியாக இந்த விடயம் பெரும் சர்ச்சையாக மாறி இருந்தாலும் இதில் பல அரசியல் உள்நோக்கங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.காரணம் அரசிடம் உள்ள தொழிநுட்ப அறிவு போதைாமை தான்.
அத்தோடு, திறைசேரி கொடுப்பனவு விவகாரத்தில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், மகிந்த ராஜபக்சவின் பல விசுவாசிகள் தொடர்ந்தும் முக்கிய பொறுப்புக்களில் இருக்கின்றமையும் இதற்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,