போர் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பாக அநுரவின் கருத்து: விளக்கமளித்த கஜேந்திரன் எம்.பி
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளமை தொடர்பில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம் (28.08.2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவம் வலுவிழந்திருந்தது. இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைவடைந்திருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு தயாராக இருந்தனர்.
இந்நிலையில், ஜே.வி.பி கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பான்மை இளைஞர்களிடம் இனவெறியை தூண்டி இராணுவத்தில் இணைத்து இனப்படுகொலைக்கு வழிவகுத்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri