சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை வெளியிடும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு அதிருப்தி கொண்டுள்ளார்.
ஊடக நிகழ்ச்சி
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் நிலந்தி கொட்டஹச்சி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் ஒருவர், இரண்டு அமைச்சர்கள் ஆகியோரை வரவழைத்து இது குறித்து தனது அதிருப்தியை ஜனாதிபதி நேரடியாகவே வெளிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மேற்குறித்த அரசியல்வாதிகளை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இனிவரும் காலங்களில் ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விட வேண்டாம் என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பொறுப்பாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
