தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அநுர அரசின் இனவாதம் அம்பலம்! கஜேந்திரகுமார் எம்.பி

Tamils Anura Kumara Dissanayaka Gajendrakumar Ponnambalam Government Of Sri Lanka Prison
By Rakesh Jan 18, 2025 08:27 AM GMT
Report

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான் என  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ''கடந்த வாரம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் கைதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் ஆதரவுடன் கையொப்பம் பெறும் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அது வெற்றி பெற்றுள்ளமையை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்கள்! அவசர உதவி கோரும் பொலிஸார்

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்கள்! அவசர உதவி கோரும் பொலிஸார்

பயங்கரவாத தடைச் சட்டம்

விசேடமாக தமிழ் மக்களுக்காகப் போராடி ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மெளனிக்கப்பட்டபோது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அநுர அரசின் இனவாதம் அம்பலம்! கஜேந்திரகுமார் எம்.பி | Anura Govt S Racism In Tamil Political Prisoners

இந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் அரசாங்கத்தினாலேயே ஒரு சட்டவிரோதமான, கொடூரமான, சட்டத்தின் ஆட்சியை மீறுகின்ற ஒரு ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கருத்து ஸ்ரீலங்கா அரசினால் சர்வதேச மட்டத்தில் விசேடமாக ஐ.நா. பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு சட்டத்தின் ஆட்சி முறைக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான விடயமாகவும் கருதப்படுகின்றது. அது முற்றிலும் நீக்கப்பட்டு ஒரு புதிய சட்டம் சர்வதேச சட்டத்துக்கு அமைவாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அல்லது இருக்கும் சட்டத்தை முற்றுமுழுதாக மாற்றியமைத்து சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி நிற்கின்றது. இது கையொப்பம் பெறும் போராட்டம் ஊடாகவும், வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கூறுகின்றார்.அவர் அதனைச் சொல்வதற்கு அரசியல் பின்னணிதான் காரணம்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

அரசியல் கைதிகள்

ஏனெனில் இதற்கு முதல் அவருடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வந்து சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று பேசியிருந்தார். ஆனால், தற்போது நீதி அமைச்சர் அந்த விடயத்திலிருந்து பின்வாங்குகின்றார். இதுவொரு அரசியல் காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அநுர அரசின் இனவாதம் அம்பலம்! கஜேந்திரகுமார் எம்.பி | Anura Govt S Racism In Tamil Political Prisoners

அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியின் ஜே.வி.பி. அமைப்பினரின் உறுப்பினர்களும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களும் அரசியல் கைதிகளாகவே இருந்தனர். இப்போதும் கூட அவர்கள் ஆட்சியில் இருந்திருக்காவிட்டால் வேறு ஒரு தரப்பு ஆட்சியில் இருந்திருந்தால், அவர்களது உறுப்பினர்கள் கைது செய்யப்படும்போது, அது அரசியல் நோக்கத்துக்கான கைதாகவே இருந்திருக்கும்.

ஆனால், அதே நிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான். இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

இந்த நீதி அமைச்சர் கடந்த காலங்களில் இருந்த பிற்போக்குவாத நீதி அமைச்சர்களின் நிலைப்பாட்டுடன் இணைந்து போவது ஒரு பலத்தை ஏமாற்றத்தைத் தரும் விடயமாகும். இது தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கில் மாற்றம் என்று வந்த தேசிய மக்கள் சக்தியின் நாடகம் என்பதை நிரூபிக்கும் விடயமாகவே காணப்படுகின்றது என்றார்.

எதிர்க்கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கை

எதிர்க்கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
16ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
100ம் ஆண்டு பிறந்தநாள்

யாழ். கரவெட்டி, இரணைப்பாலை

07 Jan, 2000
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
அகாலமரணம்

கொக்குவில், Zürich, Switzerland

16 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US