புலம்பெயர் தமிழர்களை மிரட்டும் அநுர அரசின் நேரடி கைது
புலம்பெயர் தமிழர்களை மிரட்டும் அநுர அரசின் நேரடி கைது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக சென்ற ஒருவர் மீண்டும் இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலையிலேயே மக்கள் புலம்பெயர்ந்து வந்தனர்.
கனடா போன்ற மேற்குலக நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்தோரை இலங்கைக்கு அழைக்கும் அநுர அரசு தமிழகத்தில் உள்ளோரை அழைப்பதில்லை.
தமிழகத்திலுள்ளவர்கள் இலங்கைக்கு வர வேண்டாம் என்ற செய்தியை தான் குறித்த முதியவரின் கைது எடுத்துக்காட்டுகின்றது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..