ரணில் என்ன முட்டுக்கட்டை போட்டாலும் தேர்தல் நிச்சயம் - அனுரகுமார

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka
By Farook Sihan Jul 13, 2024 06:17 AM GMT
Farook Sihan

Farook Sihan

in அரசியல்
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

அம்பாறை (Ampara) மாவட்ட கரையோர பிரதேச வர்த்தக பிரமுகர்களை நேற்று (12.07.2024) மாலை காரைதீவில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டு மக்கள் காலம் காலமாக நாட்டையும், மக்களையும் அழித்து வருபவர்களுக்கே வாக்குகளை வழங்கி வந்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

அனுமதி பத்திரம்

இதனால்தான் நாடு அனைத்து விதங்களிலும் கெட்டு குட்டி சுவராகி இருக்கின்றது. இனவாதிகளும், ஊழல்வாதிகளும், இந்நாட்டை ஆண்டதால் தான் நாட்டில் இனவாதம் மேலோங்கி பொருளாதாரம் சீரழிந்து அனைத்து விதத்திலும் நாடு பின்னடைந்து காணப்படுகிறது.

இனவாதத்தை முதலீடாக பயன்படுத்தி ஆட்சி நடத்திய ராஜபக்சக்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ரணில் விக்ரமசிங்கவால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

anura-confident-in-on-time-presidential-election

வீடமைப்பு அமைச்சின் பணத்தை வீணடித்த சஜித் பிரேமதாஸவால் (Sajith Premadasa) நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ரணில் அரசாங்கத்திடம் இருந்து மதுபான விற்பனைசாலை அனுமதி பத்திரம் பெற்ற எம். பிகள் சஜித்துடன் உள்ளனர்.

இதை சஜித் மறுப்பாரா? சஜித் தரப்பினர் பகலில் ரணில் விக்ரமசிங்கவுடன் வாதம் செய்கின்றனர். இரவில் கூட்டம் கூடுகின்றனர்.

புதிய தேசம்

ரணில் விக்ரமசிங்க என்ன முடிச்சுகளை போட்டாலும் அடுத்த இரண்டரை மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றியை பெற்று அதன் மூலமாக எமது நாட்டு மக்கள் விரும்புகின்ற மக்கள் ஆட்சி நிச்சயம் மலரும்.

anura-confident-in-on-time-presidential-election

எமது ஆட்சியில் இனவாதம் இருக்காது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும். எமது மக்களுக்கு மீட்சி ஏற்படும். தென்னிலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றித்து நிற்கின்றனர்.

அதே போல தேசிய மக்கள் சக்தி மூலமாக மக்கள் ஆட்சி உருவாக்கப்படுவதில் கிழக்கு மக்களும் பங்காளிகளாக இணைய வேண்டும்.

மாற்றுத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இலங்கையர்களாக நாம் அனைவரும் வாழ்வோம். புதிய தேசத்தை கட்டியெழுப்புவோம்” என கூறியுள்ளார்.

ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாடாளுமன்றில் பகிரங்க மன்னிப்பு கோரிய காவிந்த ஜயவர்தன!

நாடாளுமன்றில் பகிரங்க மன்னிப்பு கோரிய காவிந்த ஜயவர்தன!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US