ராஜபக்சர்களுள் இருவர்! முன்னாள் அமைச்சர்களும் பட்டியலில்.. முக்கிய வழக்குகளை கையில் எடுக்கும் அநுர
நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மேர்வின் சில்வா ஆகியோரிடம் மிக விரைவில் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அநுரகுமார,
"நாட்டில் உள்ள பல விசாரணைகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கு ஏராளமான வழக்குகள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அது போதாது.
நீதிமன்ற அதிகாரம்
அதன் பிறகு அந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.அதுதான் கடைசி படி.
அதன் பிறகு, நீதிமன்றத்திற்கு தண்டனைவழங்க அதிகாரம் உள்ளது.
அரசு நிறுவனங்களின்(நீதிமன்றங்களின்) முக்கியமான பங்கு, வழக்குகளை விசாரித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதாகும்.
இப்போது கெஹெலிய ரம்புக்வெல்லவின் விசாரணை முடிவுக்கு வருகிறது. குற்றப்பத்திரிகை மிக விரைவில் ஒப்படைக்கப்படும். மேர்வின் சில்வாவின் விசாரணை முடிவுக்கு வருகிறது. குற்றப்பத்திரிகை மிக விரைவில் ஒப்படைக்கப்படும்.
கிரிஷ் பரிவர்த்தனை
இந்நிலையில் கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக நமாலுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. யோசிதாவிடமும் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள். அதன் பிறகு, நீதிமன்றத்திற்குச் செல்வதே பணி.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சென்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை முன்வைப்பார்கள். நீதிமன்றத்தால் ஒரு முடிவு எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
