லசந்த - வசீம் தாஜூதீன் கொலைகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஜனாதிபதி அளித்துள்ள உறுதி
வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
அமைதியான மக்களை கொன்று குவித்த குற்றவாளிகள், அந்த சம்பவங்களுக்கு பதிலளிக்கவில்லை இந்தநிலையில் அனைவரும் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கப்படும் என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் எனவும் சுட்டகாட்டியுள்ளார்.
தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த உறுதியை அளித்துள்ளார்.
அனைத்து கொலைகளின் சகாப்தம்
அரசியல் அதிகாரத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும்.
இந்தநிலையில் அனைவரின் உயிர்களும் பெறுமதியானவை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு, அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து கொலைகளின் சகாப்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
