மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு (Photos)

Batticaloa Shanakiyan Rasamanickam SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Kumar Oct 09, 2023 09:55 AM GMT
Report

மட்டக்களப்பில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணியானது ஆரம்பமாகி காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஞாபகார்த்த இடம் வரையில் சென்று அங்கு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பின் ஊடாக இலங்கை அரசானது உடனடியாக அடக்குமுறை சட்டங்களை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய சட்டத்தரணிகள் (Video)

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய சட்டத்தரணிகள் (Video)

கருத்துச் சுதந்திரம் 

கிழக்கு மாகாண சிவில் சமூகம் சார்பாக முகமட் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணி சென்றது.

மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு (Photos) | Anti Government Protest In Batticaloa

பேரணியில் கலந்துகொண்டவர்கள், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், தகவலை அணுகுவதும் கருத்துச்சுதந்திரமும் எங்களது அடிப்படை உரிமை, ஊடகத்திற்கு சுதந்திரம் மற்றும் சுயாதீனம் வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க சட்டங்களை உருவாக்குங்கள், அவர்களை ஒடுக்குவதற்கு அல்ல போன்ற பல்வேறு கோசங்களும் இதன்போது எழுப்பப்பட்டது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்! பற்றி எரியும் காசா: 1000 க்கும் மேற்பட்டோர் பலி

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்! பற்றி எரியும் காசா: 1000 க்கும் மேற்பட்டோர் பலி


இந்த போராட்டத்தின் முன்னாள் பிரதேச மற்றும் மநாகரசபை உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

பாரிய ஒரு பொருளாதார சுமை

இதன்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு (Photos) | Anti Government Protest In Batticaloa

இலங்கை நாட்டு மக்கள் பாரியதொரு சவாலான சூழலை கடந்து தங்களது பொருளாதார மற்றும் சமூக வாழ்வை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள இக்கால பகுதியில் அரசானது அவர்கள் மீது ஈடுகொடுக்க முடியாத பாரிய ஒரு பொருளாதார சுமைகளையும், வாழ்க்கை செலவீனங்களையும், வரிச் சுமைகளையும் சுமத்தியுள்ளதோடு அரசிடம் இருந்து பாதிப்புற்ற மக்களுக்கு பெறக்கூடிய சமூக நலத்திட்டங்களையும் இல்லாது செய்வது அரசு மக்களுக்கு செய்கின்ற பாரியதொரு அநீதியும் உரிமை மீறலும் ஆகும்.

தற்போது அரசு சர்வதேச சமூகம் அல்லது நிதி நிறுவனங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதை நோக்காக்க கொண்டு செயல்படுவது மக்களுடைய வாழ்வியலையும் பொருளாதார நிலைமையும் கேள்விக்குறிக்கி உள்ளாக்குகின்றன.

பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)

பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)

இவற்றை எதிர்த்து மக்கள் போராட்டங்களையும் அரசை நோக்கி எழுப்புகின்ற கேள்விகளையும் அடக்குவதற்கான செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றார்கள் என்பதனை மக்களாகிய நாம் நன்கு அறிந்துள்ளோம்.

மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு (Photos) | Anti Government Protest In Batticaloa

குறிப்பாக கடந்த காலங்களில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முடக்கப்பட்டு போராடியவர்கள் மீது அரச படையினர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் அதே போன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை குறிப்பிடலாம்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

அதேபோன்று எதிர்வரும் காலங்களில் அரசினுடைய முடிவுகளுக்கு திட்டங்களுக்கும் மக்களால் மேற்கொள்ளப்படும் கேள்விகளையும் போராட்டங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கிலே அரசனது பல்வேறுபட்ட அடக்குமுறை சட்ட வரைவுகளை முன்மொழிந்து அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்கி மக்களினுடைய அடிப்படை கருத்து சுதந்திரத்தினையும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தினையும் இல்லாது செய்வதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்ட வரைவுகளை முன்மொழியப்பட்டுருகின்றன.

மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு (Photos) | Anti Government Protest In Batticaloa

அத்தோடு இச்சட்டங்கள் முற்று முழுதாக தகவல்களை அணுகுவதையும் கருத்து தெரிவிப்பதையும் ஊடக சுதந்திரத்தையும் இல்லாது செய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஆகவே இது ஒரு ஜனநாயக விழிமியத்தை மீறுகின்ற செயலாகும். ஆகையில் இலங்கை அரசன் முன்மொழிந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை அடக்குமுறை சட்ட வரைவுகளை உடனடியாக மீளப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய சட்டத்தரணிகள் (Video)

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய சட்டத்தரணிகள் (Video)


4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US