இலங்கையில் மீண்டும் நீண்டநேர மின்தடை!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தக்கூடிய நிலையொன்று உருவாகலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
மின் பொறியியலாளர் சங்க தலைவர் நிஹால் வீரரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அதிக பயன்பாடு

மேலும் கூறுகையில், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது, மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படுகின்றது.
இவ்வாறு, நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் மின்சாரத்தை வழங்கினால், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையக்கூடும்.
அத்துடன், மக்கள் வழமையான முறையில் மின்சாரத்தை அதிகளவு பயன்படுத்த பழக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஏப்ரல் மாதத்தின் பின்னர் ஏற்படக்கூடிய மழையை கருத்திற் கொண்டுதொடர்ச்சியாக மின்சாரம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் எனினும், மூன்று மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டுமே மழை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனனியை வெளியேறியதை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam