பதவி விலகிய மற்றுமொரு முக்கிய நபர்!
தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பணிப்பாளர் நாயகம் தமது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இஷினி விக்ரமசிங்க தனிப்பட்ட காரணங்களால் பதவியை இராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் கோவிட் தொழில்நுட்பக் குழுவிலிருந்து இந்த வாரம் இரண்டு முக்கிய உறுப்பினர்களும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.