வவுனியாவில் மேலும் 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் மேலும் 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (16.05) இரவு வெளியாகின.
அதில், மாமடு பகுதியைச் சேர்ந்த 7 பேருக்கும், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா, பம்பைமடுவில் உள்ள வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் உள்ள 2 பேருக்கும், கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும்
சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.