மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார பரிந்துரைக்கமைய மேல் மாகாணாத்தில் பாடாலைகள் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையின் கீழ் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
மேல் மாகாணத்தின் 3 மாவட்டங்களில் 11 வலயங்களுக்காக 38 பிரவுகளில் 1526 பாடசாலைகள் உள்ளன.
சில பிரிவுகளில் ஒரு கொரோனா நோயாளியேனும் அடையாளம் காணப்படவில்லை. அந்த பிரிவுகளில் மாணவர்களை வீடுகளில் வைத்திருக்காமல் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.