நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக வத்திக்கான் அறிவிப்பு
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
நாட்டின் நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸின் செயலாளர்களில் ஒருவரான மிர்ஸ்லோவ் வொசொவ்ஷி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் உள்ளடங்கியுள்ள விடயம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜயவர்தன அனுப்பி வைத்த கடிதத்திற்கு, பதில் கடிதம் அனுப்பி வைத்ததன் மூலம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்க நியாயம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.