பாடசாலை மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு
ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25 இற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
சிரமங்களுடன் கல்வி கற்கும் தரம் 1 முதல் தரம் 11 வரையான பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இந்த புலமைப்பரிசில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கால அவகாசம் நீடிப்பு
இந்த நிலையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஏப்ரல் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தைப் பார்வையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |