அடுத்தகட்ட முக்கிய திட்டத்தை வெளியிட்ட மகிந்த
இந்த வருடத்தில் முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் சட்டச் சிக்கல் இல்லை. முதலில் தேர்தல் நடத்துவது குறித்து தங்கள் கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி
ஆனால் அந்த மக்கள் அனைவரும் இறுதியில் கட்சியின் உத்தியோகபூர்வ கருத்துக்கு மதிப்பளிப்பார்கள் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள முதலாவது தேர்தல் தொடர்பில் அரசாங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடி நாட்டுக்கு அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri