நாட்டில் மேலும் அதிகரித்துள்ள கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் மேலும் 479 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,இன்றைய தினம் 2,259 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 225,897 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.