ஜனாதிபதிக்கு ஓர் திறந்தமடல்!

Srilanka Jaffna Parliment Gotapaya
By DiasA Mar 26, 2022 08:49 PM GMT
Report
Courtesy: கட்டுரையாசிரியர் ச. வி. கிருபாகரன்

உங்களிடம் ‘ஐபோவன்’ என்று பேசுவதற்காக எனது நண்பர்கள், தோழர்கள் சிலர் என் மீது கோபம் அடைவார்கள் என்று நான் நம்புகிறேன். நான் ஏன் ‘வணக்கம்’ அல்லது ‘சலாம் அளிக்கும்’ அல்லது நீங்கள் அமெரிக்கராக இருப்பதால், ‘ஹாய் படி’ (வணக்கம்) என்று கூட சொல்ல முடியாது என்றும் கூறலாம்.

அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் தான் முதல் பெண், ஆபிரிக்க ஆசிய அமெரிக்கத் துணைத் தலைவர் என்று உலகம் முழுவதும் கூறும்போது, அவர்கள் அனைவரும் உங்களை மறந்து விடுகிறார்கள்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிபராகப் பொறுப்பேற்ற முதல் ஆண் அமெரிக்கர் நீங்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை! உங்கள் அமைச்சரவை உங்கள் வேகத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், பல பொய்யர்கள், நேர்மையற்றவர்கள், போக்கிரிகளை பல்வேறு அமைச்சுக்களில் நியமித்தீர்கள். ஆனால், நீங்கள்தான் தங்கள் அமைச்சுக்களை நடத்துகிறீர்கள் என்று பலர் முணுமுணுக்கிறார்கள்.

நீங்கள் சில அமைச்சர்களை ஒருவர் பின் ஒருவராக நீக்குவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று பலமாக நம்பப்படுகிறது. தமிழில், “வளர்த்த கட மார்பில் பாய்வதாக” ஒரு பழமொழி உண்டு. நீங்கள், உங்கள் குடும்பம் அனைவரும் விதைத்ததை, இப்போது அறுவடை செய்கிறீர்கள். இது நிகழும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம்.

இருப்பினும், நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தின் பெருமைக்காக சில தனிநபர்கள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிறரை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை முழு உலகம் அறியும்.

49வது அமர்வில் பேராசிரியர் பீரிஸ் 

ஜெனீவாவிற்கு விஜயம் செய்த பின்னர் பேராசிரியர் பீரிஸ் – ‘மறதி நோயினால்’ பாதிக்கப்பட்டிருக்கிறார் போல் தென்படுகிறது. 49வது அமர்வில் அவர் ஆற்றிய உரை உங்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும், தென்னிலங்கை மக்களையும் மகிழ்விக்கும் வகையில் அமைந்திருந்ததை தவிர்த்து, சர்வதேச சமூகத்திற்குத் தகவல்கள் எதுவும் புதியதாக கொடுக்கபடவில்லை.

மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் ஆணையாளர் மைக்கேல் பச்லெட் மீதான பீரிஸ் அவர்களின் கருத்துக்கள், தாக்குதல்கள் இலங்கைக்கு எதிர்விளைவாக அமைந்தன என்பதே உண்மை. தினேஷ் குணவர்தனவை விட, தான் சிறந்து வேலைவதாக உங்களுக்குக் காட்ட முயல்கிறார் - நல்ல நாடகம், ஆனால் சிறிலங்கா, 49வது அமர்வில் அவமானத்தை சம்பாதித்துள்ளது. சர்வதேச அளவில், பீரிஸ் அவர்களும், மறைந்த மங்கள சமரவீரவும், தங்களது நற்பெயரையும், நன்மதிப்பையும் இழந்துள்ளனர்.

2000களில் தாய்லாந்திலிருந்து ஜப்பான், நோர்வே மற்றும் அமெரிக்கா வரை, நடந்த அமைதிப் பேச்சின் போது இவரது அர்த்தமற்ற அறிக்கைகளை சர்வதேச சமூகம் நன்கு அறியும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில், 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருந்ததாக அவர் கூறும்போது, அவர் தன்னை தானே முட்டாளாக்குவது நிரூபணமாகிறது. செப்டம்பரில் நடைபெறவுள்ள 51வது அமர்வில் அவரது கூற்று பொய்யானது என்பது நிரூபிக்கப்படும் - பொறுத்திருந்து பாருங்கள்!

வணக்கம், சரியோ தவறோ, நீங்கள் பல வருடங்களாக அமெரிக்காவிலிருந்தீர்கள். அந்த காலகட்டத்தில் நீங்கள் அரசியலையோ, இராஜதந்திரத்தையோ கற்றுக் கொள்ளவில்லை.

இலங்கை சிங்கள பௌத்த நாடு, ஒரே நாடு, ஒரே (கோட்டா) சட்டம் போன்றவற்றை நீங்கள் வலியுறுத்திய பின்பும், எந்த ஒரு விவேகமுள்ள தமிழ் அரசியல்வாதியோ அல்லது அரசியல் கட்சியோ மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல் உங்களுடன் பேச்சு நடத்த வருவார்கள் என்று நான் எண்ணவில்லை.

தமிழ் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், புலன் பெயர்ந்த தமிழர் மத்தியில் பல கறுப்பு ஆடுகள் உள்ளார்கள் என்பது உண்மை. இவர்களை தென்னிலங்கை அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் *‘**பிளாக் மெயில்**’* செய்து பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது உண்மை.

கடந்த காலங்களில், நீங்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மக்களை எப்படி ஏமாற்றினீர்கள் என்பதை உலகம் ஒருபோதும் மறக்காது! தீவின் வரலாற்றைப் பற்றி உங்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை.

சிங்களவர்களின் வாக்குகளால் தான் ஜனாதிபதி ஆனதாக நீங்கள் பெருமையாக கூறுகின்றீர்கள், நல்லது. ஆனால், உங்களிற்கு வாக்களித்த அதே மக்கள், இன்று உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதுடன், அவர்களைப் பெரும், கடுமையான, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கி, பட்டினியால் வாட வைத்துள்ளீர்களென்பது மிக வெட்கக்கேடான விடயம். தற்போது இலங்கை மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று, ‘முடியாட்சி’ முறையை நோக்கி நகர்ந்திருப்பதும் வெட்கக்கேடானது.

முடியாட்சி முறையின் கீழ் மட்டுமே முழு குடும்பமும் உயர் பதவியில் இருக்க முடியும். உங்கள் சகோதரரான மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்காகச் சர்வதேச சமூகத்திற்கும் இந்தியாவிற்கும் எத்தனை போலி வாக்குறுதிகளை வழங்கினார் என்பது உங்களிற்கும் நன்கு தெரியும்.

இவ் உலகில், அனைத்து எதிரி நாடுகளும் ஒன்றிணைந்து போரிட்ட ஒரே ஒரு யுத்தம் என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக உங்களால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் என்பது உங்களிற்கு நன்றாகத் தெரியுமென நம்புகிறேன்.

வடகொரியா மற்றும் சீனாவுடன் அமெரிக்கா உடன்படுவதில்லை. அதேபோல் பாகிஸ்தான் சீனாவுடன் இந்தியா உடன்படுவதில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிரான போரின் போது, இந்த நாடுகள் அனைத்தும் இணைந்து போரிட்டனர் என்பது சரித்திரம்.

மன்னாரில் மடுவில் நடந்த போரில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் நேரடியாக ஈடுபட்டு உயிரிழந்தனர் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அவ்வேளையில், இந்திய காங்கிரஸும் சோனியா காந்தியும் ஈழத் தமிழர்களைப் பழிவாங்க நினைத்ததால் இது சாத்தியமானது என்பதே உண்மை.

சோனியா காந்தியும் விடுதலைப்புலிகளும் 

உண்மையில், சோனியா காந்தியையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஏமாற்றுவதில், சிறிலங்கா அரசாங்கம் புத்திசாலித்தனமாக உள்ளது என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது.

1987ம் ஆண்டு ஜூலை மாதம் - சோனியா காந்தி மற்றும் பல இந்திய இராஜதந்திரிகளின் முன்னிலையில், சிறிலங்காவின் கடற்படை சிப்பாய், கொழும்பில் ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்றார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதேவேளை சிறிலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் உண்மை. ஆனால், அன்று ராஜீவ் காந்தியைக் கொல்ல முயற்சி செய்த கடற்படை சிப்பாய்; தான் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகவே தாக்கியதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இவ் கடற்படைச் சிப்பாய் இன்றும், கொழும்பில் நிம்மதியாக வாழ்கிறார்.

ஆனால், சோனியா காந்தியும் அவரது அரசாங்கமும் விடுதலைப் புலிகளை நிரூபிக்கப்படாதா குற்றச்சாட்டிற்காக, அழித்தார்கள் என்பதே உண்மை. அதாவது எந்தவித சம்பவம் நடந்த இடத்தின் ஆதாரங்கள் இல்லாது, குற்றச்சாட்டப்பட்டு அழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. அன்று சர்வதேச சமூகம் உங்களைக் காப்பாற்ற முன்வரவில்லையானால், இன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள், தமது பன்னிரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருப்பார்கள் என்பதே உண்மை.

வணக்கம், தற்போதும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், நிறைவேற்று அதிகாரங்களை அனுபவித்து வரும் நீங்கள், உண்மையான பௌத்தராகவும் இதய சுத்தியும் உள்ள நேர்மையானவராக இருந்தால், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அபிலாஷைகளை மதித்து, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்திருக்க வேண்டும்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் பலவந்தமான நாகரீகமற்ற சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுப்பதற்கு முன்னர், தெற்கின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களை, கதிர்காமம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களில் மீளக் குடியேற்றியிருப்பீர்கள்.

கதிர்காமமும் அதன் சுற்றுப்புறமும், அன்று அடர்ந்த காடாக இருந்த வேளையில் இவ்விடங்கள் தமிழர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டது என்பதை நீங்கள் ஒரு பொழுதும் மறுக்க முடியாது.

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் திகதி வெளியான ‘சண்டே லீடர்’ என்ற பத்திரிகையில் ‘கதிர்காமமும் முதல் கே.கே.எஸ்’ (தெற்கிலிருந்து வடக்கு) என்ற எனது கட்டுரையின் ஒரு பந்தியை கீழே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

“போரில் வெற்றி பெற்றதிலிருந்து, ராஜபக்சாக்களும் அவர்களது சாதுக்களும், நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், இங்கு குறிப்பிட்ட சமூகத்திற்கோ இனக்குழுவிற்கோ தனியான இடமில்லை என்றும் கூறுகிறார்கள்.

ஆகையால் யாவரும் அவர்கள் விரும்பும் இடத்தில் குடியேற உரிமை உண்டு என்கிறார்கள். இது உண்மையாக இருந்தால், கதிர்காமம், மலையகம், அனுராதபுரம், திருகோணமலை மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து தமிழர்களை, அவ் இடங்களில் ஏன் மீள்குடியேற்ற முடியாது, அரசு முன்வரவில்லை?

உங்கள் முயற்சிகளுக்கு
1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்திய போது, வடக்கு மற்றும் கிழக்கில் முப்பது வருடகால ஆயுதப் போராட்டம் நடைபெறுமென்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.

ஜே.ஆர்.ஜெயவர்தன பிரிகேடியர் டி.ஐ. வீரதுங்க 1979 இல் யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பி, அங்கு இளைஞர்களிடையே வளர்ந்து வரும் ஆயுத போராட்டத்தின் சிந்தனையை நசுக்குவதற்கு எண்ணிய பொழுது, வடக்கு, கிழக்கில் 70-80 வீதத்தை உள்ளடக்கிய நடைமுறை தமிழ் ஆட்சி (de-facto) அமையும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

இந்த குறுகிய நோக்கமுள்ள தலைவர்களைப் போலவே நீங்களும் நினைத்துச் செயற்பட்டால் - உங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்....! 1978/79ல் நடைபெற்ற ஈரானியப் புரட்சி பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இந்தப் புரட்சியை நான் நேரில் பார்த்தவன். துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் டாங்கிகள் மக்களின் விருப்பத்திற்கும் அதிகாரத்திற்கும் முன்னால் ஒன்றும் செய்ய முடியாது முடக்கப்பட்டதை எனது கண்களால் நேரில் பார்த்தேன். எவ்வாறாயினும், ராஜபக்ச குடும்பத்திற்கு எனது சிறந்த ஆலோசனை என்னவென்றால், மக்கள் ஆட்சியைப் பிடிக்கும் முன், நீங்கள் அனைவரும் தப்பித்துக்கொள்வதற்கு, விமான நிலையத்தில் ஒரு ஜம்போ ஜெட் விமானத்தைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று நீங்களும், உங்கள் கும்பலும் வலுவாக நினைத்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தாங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த தமது நிலப்பரப்புடன் தான் செல்வோம் என்ற நிபந்தனை அவர்கள் நிச்சயம் முன் வைப்பார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் இந்தியாவின் மற்றொரு மாநிலமாக மாறுவதில் அவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.

இலங்கை முழுவதையும் வன்முறை மூலம் கைப்பற்றப் போராடிய ஜேவிபி உறுப்பினர்களுக்கும் தற்போது பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன வித்தியாசம்? 88/89ல் பல சிங்கள அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், தொழில் வல்லுநர்கள், பாதுகாப்புப்படையினர்கள் மற்றும் பலரை ஜே.வி.பி.யினர் கொன்று குவித்தனர் என்பது சரித்திரம். இவ்வாறான நிலையில், ஜே.வி.பி உறுப்பினர்கள் சுத்தமான கரத்துடன் இருப்பதாகத் தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் எவ்வாறு கூற முடியும்?

யாழ் பொது நூலகம்   

இலங்கை தீவின் உண்மையான வரலாற்றை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் முன்னோர்கள் படித்த வரலாற்றுப் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டவும். இப்போது நீங்கள் அனைவரும் தென்னிலங்கை மக்களுக்கு சூழ்ச்சியான வரலாற்றை கற்பிக்கின்றீர்கள். இன்னும் சொல்லப்போனால் சிங்கள மக்களுக்கு விஷத்தை ஊட்டுகிறீர்கள்.

புத்தரின் போதனையில், இவை பற்றி எங்கு படித்தீர்கள், வாசித்தீர்கள்? உண்மையான வரலாற்றை அறிய, உங்கள் ஆலோசகர்களிடம், "லெமூரியா, குமரி கண்டம்" போன்றவற்றைப் படிக்கச் சொல்லுங்கள்.

யாழ் பொது நூலகம், அப்போதைய இரண்டு முக்கிய அமைச்சர்களின் மேற்பார்வையில், சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரால் எரித்து சாம்பலாக்கப்பட்டது. இவை பற்றி,உங்களிடமோ அல்லது வேறு யாரிடமோ நியாயமான விளக்கம் உள்ளதா?

பௌத்தம் அல்லது சிங்கள மொழி, இத்தீவில் நடைமுறை படுத்துவதற்கு முன்னரே, தமிழர்களே இத்தீவின் பூர்வீக மக்கள் என்பதை நிரூபிக்கும், அனைத்து வரலாற்று ஆவணங்களும் யாழ் பொது நூலகத்திலிருந்தமை சர்வதேச சமூகத்தில் பலருக்குத் தெரியாது. யாழ்ப்பாண நூலகத்தை எரித்து சாம்பலாக்குவதற்கு இதுவே காரணி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நாடாளுமன்றத்தின் ஆடை அணியும் கட்டுபாடு 

அதேசமயம், இலங்கை நாடாளுமன்றத்துக்கு ‘ஆடைகள் அணியும் கட்டுப்பாடு’ இருந்தால், அதை ராஜபக்ச குடும்பத்தினர் சிவப்பு சால்வை அணிந்து மீறுகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தால், இவர்களது ஆடைகளை ஏற்றுக்கொள்ள முடியுமானால், பாராளுமன்ற அமர்வுகளின் போது, அல்லது குறைந்த பட்சம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு சால்வை மற்றும் கறுப்பு சூட் அணியுமாறு நான் அன்புடன் பரிந்துரைக்கிறேன். இதை எதிர்க்கட்சியினரும் செய்யலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ராஜபக்சவின் குடும்பம்> சாதியத்தை வலுவாக நம்புவதுடன் பின்பற்றுகிறது என்று சிங்களப் பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.

சரத் பொன்சேகா, சஜிதா பிரேமலதா மற்றும் பலர் ராஜபக்சவின் குடும்பத்தின் சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். இருபத்தியோரம் நூற்றாண்டில் (21 ஆம்) இது ஒரு அவமானமான விடயம். கடந்த காலத்தில் உங்களதும், உங்கள் குடும்ப அங்கத்தவர்களதும் அட்டூழியங்களை கண்கட்டைக் கொள்ளாது ஆதரவளித்த கல்விமான்கள் உள்ளனர்.

தயான் ஜயந்திலக்க, ராதிகா குமாரசுவாமி, பேராசிரியர் விஜேசிங்கா போன்ற சிலருக்கு இலங்கையைப் பற்றிய நீண்ட தொலைநோக்குப் பார்வை இருந்ததில்லை. உங்களின் உண்மை உருவத்தை இன்று புரிந்து கொண்டு, காலம் கடந்து இவர்கள் கூச்சலிடுவதினால் எந்த பயனுமில்லை. இவர்களுக்காக வருந்துகிறோம்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US