அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்
புதிய இணைப்பு
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த காட்சியில், சட்டத்தரணி செலுத்தி சென்ற வாகனத்திற்கு முன்னால் தங்கள் வாகனத்தை துப்பாக்கிதாரிகள் இடைமறித்து நிறுத்துகின்றனர்.
பின்னர், காரில் இருந்து முகமூடியுடன் இறங்கிய இரண்டு துப்பாக்கிதாரிகளும் காருக்குள் இருந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது சரமாரி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி செல்கின்றமை காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை உட்பட பத்து குழுக்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை உட்பட பத்து குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நேற்று (13) மதியம் தலங்கம, அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கரந்தெனிய சுத்தா என்ற குற்றவாளியின் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையான குறித்த சட்டத்தரணியே அவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கு தொடர்பான தகவல்..
கரந்தெனிய சுத்தாவின் தகவலை குறித்த சட்டத்தரணி, லொக்கு பாட்டி என்ற நபருக்கு வழங்கியதால், அவரே இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

நேற்று மாலை 5 மணியளவில் தலங்கம, அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பில் இருந்த குறித்த தம்பதியினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
காரில் வந்த ஒரு குழு T-56 துப்பாக்கியால், சுமார் 10 முறை தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பிடிகலவைச் சேர்ந்த மல்வராச்சி என்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி ஆவர்.
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam