முல்லைத்தீவில் தனித்து விடப்பட்ட பாலம்: பராமரிப்பு இல்லாத சூழலில் புனரமைப்பு ஏன் என மக்கள் கேள்வி

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Uky(ஊகி) Sep 26, 2024 10:21 PM GMT
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் போக்குவரத்துப் பாதை ஒன்றில் அமைக்கப்பட்ட பாலம் தனித்து விடப்பட்டுள்ளது.வீதிக்கு குறுக்காக அமைக்கப்படும் பாலமாக இருந்து போதும் வீதியின் குறுக்கே பாலம் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.

இரண்டு கிலோமீற்றர் நீளமான பாதையொன்றில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம் வெள்ளத்தால் வீதி அரிக்கப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சரியான திட்டமிடல் இல்லாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என அப்பகுதி மக்களில் சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கருத்துக்களைத் தெரிவித்தனர்.

டெஸ்ட் வரலாற்றில் கமிந்து மெண்டிஸினின் அரிய சாதனை

டெஸ்ட் வரலாற்றில் கமிந்து மெண்டிஸினின் அரிய சாதனை


முல்லைத்தீவு கணுக்கேணிக் குளத்தின் இடதுகரை வாய்க்காலுக்கு அருகாக செல்லும் இந்த பாதை பிரதேச அபிவிருத்திக்கு முக்கியமான பாதையாகவும் இருக்கிறது.

வீணடிக்கப்படும் பணம் 

வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள பல பாலங்கள் பாரியளவிலான சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.அவற்றுக்கூடாக நீர் பாய்ந்து செல்லாது வீதிக்கு மேலாக பாய்ந்து செல்லும் அவல நிலையில் இருக்கின்றன.

மேட்டு நிலத்தில் இருந்து வரும் வெள்ள நீரோட்டத்தின் மேலாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீதியின் திரும்பம் ஒன்றில் தனித்து விடப்பட்ட இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தனித்து விடப்பட்ட பாலம்: பராமரிப்பு இல்லாத சூழலில் புனரமைப்பு ஏன் என மக்கள் கேள்வி | An Isolated Bridge In Mullaithivi

அதிகமான நீரோட்டத்தினை எதிர்கொண்டு நிற்கும்படி பாலம் கட்டப்படவில்லை என பொதுமக்கள் தங்கள் சினத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பாலம் அப்படியே கீழறங்கிக் கொள்ள அதன் மீது போடப்பட்ட கிரவல் மண் அவ்வளவும் நீரினால் அரிக்கப்பட்டுள்ளது.பாதையின் பக்கத்தில் பாலத்தின் இரு பக்கங்களிலும் பாரிய குழி தோன்றியுள்ளது.

பாதையில் பயணிக்கவே பாலம் தேவையாக உள்ள போதும் இப்போது பாலத்துக்கு போகவே இன்னொரு பாலம் போட்டுத் தான் போக வேண்டும் என விவசாயிகள் பலர் தெரிந்தமையும் நோக்கத்தக்கது.

முல்லைத்தீவில் தனித்து விடப்பட்ட பாலம்: பராமரிப்பு இல்லாத சூழலில் புனரமைப்பு ஏன் என மக்கள் கேள்வி | An Isolated Bridge In Mullaithivi

பாலத்தினை கட்டும் போது அதனூடாக பாய்ந்து செல்லும் நீர் பாதையின் மண்ணினை அரித்துச் செல்லாதவாறு பலமான தடுப்பணை இடப்பட்டிருக்க வேண்டும் என இந்த பாலத்தின் நிலை தொடர்பில் துறைசார் நிபுணர் ஒருவருடன் கேட்ட போது தெரிவித்தார்.

பொது மக்கள் சொல்வது போல் தொடர் பாவனைக்கு ஏற்றபடி இல்லாத அபிவிருத்திச் செயற்பாடுகள் விழலுக்கு இறைத்த நீர் போன்று பயனற்றதாகவே போகும்.இத்தகைய உறுதியற்ற கட்டுமானங்களால் நிதி மட்டுமே வீணாக்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இடதுகரை வாய்க்கால் 

கணுக்கேணிக் குளத்தின் இடதுகரை பிரதான வாய்க்கால் புனர்நிர்மாணம் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவு, முல்லைத்தீவு மாவட்டம்.

இத்திட்டமானது புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பினால் (IOM) நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப அனுசரணையுடனும் அவுஸ்ரேலிய சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் (AusAid)நிதியுதவியுடன் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது என விவரிக்கப்படும் பிரதான வாய்க்கால் ஒன்றிற்கான பாதையாகவும் இந்தப் பாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் தனித்து விடப்பட்ட பாலம்: பராமரிப்பு இல்லாத சூழலில் புனரமைப்பு ஏன் என மக்கள் கேள்வி | An Isolated Bridge In Mullaithivi

கணுக்கேணிக் குளத்தின் இடது கரையில் இருந்து குமுழமுனை தண்ணீரூற்று பிரதான வீதியை இணைக்கும் படி இந்தப் பாதை அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களினூடாக பயணிக்கும் இந்த வாய்க்காலும் அதனுடன் இணைந்த பாதையும் சரிவர பராமரிக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மீள் பராமரிப்பற்ற அபிவிருத்தி

மீள் பராமரிப்பு இல்லாத அபிவிருத்திகள் தேவையற்றவையாகும் என சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவிடப்படும் நிதியை பயனுடைய முறையில் செலவழித்தல் என்ற அடிப்படையில் அந்த அபிவிருத்தி தொடர்பான சரியான மீள் பராமரிப்புத் திட்டம் அவசியமாகும்.

அவ்வாறு மீள் பராமரிப்புத் திட்டம் இல்லாத அபிவிருத்திச் செயற்பாடுகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது போய்விடும்.இதனால் அவை நீண்ட காலத்திற்கு பயனுடையதாகவும் இருக்கப் போவதில்லை.

முல்லைத்தீவில் தனித்து விடப்பட்ட பாலம்: பராமரிப்பு இல்லாத சூழலில் புனரமைப்பு ஏன் என மக்கள் கேள்வி | An Isolated Bridge In Mullaithivi

அபிவிருத்தித் திட்டமிடலின் போது அபிவிருத்திச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தும் வேளை அதனை கண்காணித்து அதன் நிலைத்திருக்கும் தன்மையிலான அபிவிருத்தியை உறுத்திப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அத்தோடு அபிவிருத்தியினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை நீண்ட காலத்திற்கு பாதுகாத்துக்கொள்ள சிறந்த பராமரிப்பு முறை ஒன்றை பிரதேச மக்களுடன் இணைந்ததாக உருவாக்கி கொள்ளும் போது குறைந்த செலவில் மீள் பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.

மீண்டும் மீண்டும் அபிவிருத்தி என செலவழிக்கும் நிதியை புதிய உட்கட்டுமானங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இதனால் வழியேற்படும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அறிவித்தல் அனுப்பிய டெல்லி மேல் நீதிமன்றம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அறிவித்தல் அனுப்பிய டெல்லி மேல் நீதிமன்றம்

பொது தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணிக்கு திலித் ஜயவீர முயற்சி

பொது தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணிக்கு திலித் ஜயவீர முயற்சி

மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US