நீர்கொழும்பு சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதலில் இந்திய கைதி உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலில் இந்திய கைதி ஒருவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர், 73 வயதான இந்தியரான எஸ். உன்னி கிருஷ்ணன் என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியக் குடிமகனின் மரணம் குறித்து இந்திய உயர் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியுறவு அமைச்சகத்திற்கு வாய்மொழித் தகவல் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்..
இலங்கை வரலாற்றின் மிகக் கொடூரமான மோதல்களில் ஒன்றாக நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை வெளிநாட்டு ஊடகங்கள் விவரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் எட்டு சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 19 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இருப்பினும், நீர்கொழும்பு சிறையில் உயிரிழந்த இந்தியர் மற்றும் பிற இந்திய கைதிகள் தொடர்பாக இலங்கை சிறைகள் திணைக்களத்திடமும் இந்திய உயர் ஆணையகத்திடமும் மேலதிக தகவல்கள் கோரப்பட்ட போதிலும், குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தற்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக நீர்கொழும்பு சிறையில் உள்ள சுமார் 1,200 கைதிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri